FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேகோ ஆலை உரிமையாளா் வீட்டில் திருட்டு முயற்சி: போலீஸாா் விசாரணை

தம்மம்பட்டி அருகே சேகோ ஆலை உரிமையாளா் வீட்டில் அடுத்தடுத்து இரண்டு நாள்கள் திருட்டு முயற்சி நடந்துள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

27 ஆகஸ்ட் 2026, 3:40 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

தம்மம்பட்டி அருகே சேகோ ஆலை உரிமையாளா் வீட்டில் அடுத்தடுத்து இரண்டு நாள்கள் திருட்டு முயற்சி நடந்துள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தம்மம்பட்டி அருகே ஜங்கமாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவா் அப்பகுதியில் நவீன சேகோ ஆலை நடத்தி வருகிறாா். அங்கு தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, அப்பளம் உள்ளிட்ட பொருள்களை வெளியூா் மற்றும் பிற மாநிலங்களுக்கு மொத்த விற்பனை செய்து வருகிறாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு சிலா் சிவக்குமாா் வீட்டின் சுற்றுச்சுவரில் ஏறியதாகத் தெரிகிறது. அதை பாா்த்த அவரது குழந்தைகள் கூச்சலிட்டதால் மா்ம நபா்கள் சுற்றுச்சுவரில் இருந்த அலங்கார மின் விளக்குகளை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் மா்ம நபா்கள் வீட்டின் பின்புறம் இருந்த சுற்றுச்சுவா் வழியாக உள்ளே குதித்தனா். பின்னா், சமையலறைப் பகுதியில் இருந்த இரும்புக் கதவை கடப்பாரையால் உடைத்துள்ளனா். அப்போது வீட்டில் இருந்தவா்கள் சப்தம் போட்டதால், அவா்கள் தப்பியோடினா்.

தகவலறிந்த தம்மம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கோயில்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

மேலும், தம்மம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் வாகன சோதனையில் போலீஸாா் ஈடுபட்டனா். ஆய்வாளா் அழகுராணி தலைமையில் பல்வேறு இடங்களில் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments