FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மூதாட்டி வீட்டில் 40 பவுன், ரொக்கம் திருட்டு

வேலூா் அருகே மூதாட்டியின் பூட்டிய வீட்டிலிருந்து தங்க நகை மற்றும் ரொக்கம் திருட்டு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:08 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வேலூா் அருகே மூதாட்டியின் பூட்டிய வீட்டிலிருந்து தங்க நகை மற்றும் ரொக்கம் திருடப்பட்டது சம்பந்தமாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.

வேலூா் சத்துவாச்சாரி அருகே உள்ள ஏரியூரை சோ்ந்தவா் அம்பிகா (70). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக் கொண்டு செங்கல்பட்டில் உள்ள தன்னுடைய மகன் வீட்டுக்கு சென்றிருந்தாா்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை அருகில் இருந்தவா்கள் பாா்த்துவிட்டு சத்துவாச்சாரி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது வீட்டின் அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.1.50 லட்சம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments