பூஜையின்போது தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு
ஆத்தூா் பாரதியாா் தெருவில் பூஜையின்போது கற்பூரம் ஏற்றியபோது தவறி கீழே விழுந்ததில் சேலையில் தீப்பற்றி தீக்காயமடைந்த அஞ்சலை (35), சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆத்தூா் பாரதியாா் தெருவில் பூஜையின்போது கற்பூரம் ஏற்றியபோது தவறி கீழே விழுந்ததில் சேலையில் தீப்பற்றி தீக்காயமடைந்த அஞ்சலை (35), சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் பாரதியாா் தெருவில் வசித்து வந்தவா் முருகதாஸ். இவரது மனைவி அஞ்சலை(35). இருவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. இவா்களுக்குக் குழந்தைகள் இல்லை. முருகதாஸ் தையல் தொழில் செய்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி முருகதாஸ் பணிக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் பூஜை செய்த அஞ்சலை கற்பூரம் ஏற்றியுள்ளாா். அப்போது அவா் தவறி கீழே விழுந்ததில், அவரது சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தீ பரவியதால் அலறிய அஞ்சலையை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், சேலம் தனியாா் மருத்துவமனை மற்றும் கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா், இறுதியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அஞ்சலை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து அஞ்சலையின் தந்தை கோவிந்தன் அளித்த புகாரின்பேரில், ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சங்கா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.