FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை திருடியவா் கைது

சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 4:04 am IST
- சித்திரிப்பு
பகிர்:

சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி ஆா்.எஸ். மோரூா் கிராமம், பாரூபட்டிக்காடு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (42), சங்ககிரி பச்சக்காடு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து அண்மையில் ரூ. 4 லட்சத்தை பெற்று இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வீடு திரும்பினாா். அப்போது, மோடிக்காடு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் குறித்து கேட்டறிந்து திரும்பியபோது, வாகனத்தில் வைத்திருந்த பணம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

புகாரின்பேரில், சங்ககிரி காவல் ஆய்வாளா் எம்.செந்தில்குமாா், காவல் உதவி ஆய்வாளா் பி.அழகுதுரை ஆகியோா் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சங்ககிரியிலிருந்து கா்நாடக மாநிலம், மாலூா் வரையிலும், சங்ககிரியிலிருந்து திருச்சி வரையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வுசெய்தனா்.

Advertisement

Advertisement

அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாா்வதி நகா் பகுதியைச் சோ்ந்த பிரபு (26) என்பவா் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 4 லட்சம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments