FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆத்தூா் அருகே மகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற தந்தை கைது

ஆத்தூா் அருகே மகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 6:25 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே மகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி கிழக்குக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65). இவரது மகன் சுரேஷ் (35). இவருக்கு மனைவி மஞ்சு (30), 9 வயதில் ஒரு மகன், 6 வயதில் ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில் தம்பதியா் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுரேஷை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக நாமக்கல்லில் உள்ள தனது தாய் வீட்டில் மஞ்சு வசித்து வருகிறாா். நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் சுரேஷ், நிலத்தை விற்று பணம் தருமாறு தனது தாய் ஜெயாவிடமும், தந்தையிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் புதன்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற சுரேஷ் தனது தந்தை செல்வராஜிடம் தகராறு செய்துவிட்டு வீட்டு வாசலில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கினாா்.

அப்போது, மதுபோதையில் இருந்த செல்வராஜ், சுத்தியலால் சுரேஷின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஏத்தாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments