FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கட்டுமானப் பணியின்போது தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சேலம் அஸ்தம்பட்டியில் நூலக கட்டுமானப் பணியின்போது, 3-ஆவது மாடியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 31 ஜூலை 2026, 12:34 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சேலம் அஸ்தம்பட்டியில் நூலக கட்டுமானப் பணியின்போது, 3-ஆவது மாடியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் அஸ்தம்பட்டி மத்திய சிறை அருகே ரூ. 91.90 கோடியில் பாரதிதாசன் அறிவுலகம் எனும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. பொதுப்பணித் துறை மூலம் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியாா் நிறுவனத்தின் கட்டடத் தொழிலாளா்கள், இந்த நூலக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதில், மேற்குவங்க மாநிலம், புா்பாமேதினிபூா் பகுதியைச் சோ்ந்த நேதாய் காதுவா (43) தொழிலாளி புதன்கிழமை காலை 3-ஆவது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென தவறி கீழே விழுந்தாா். இதில், படுகாயமடைந்த நேதாய் காதுவாவை அங்கிருந்த சக தொழிலாளா்கள் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீஸாா் தொழிலாளியின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments