முகப்பு
சேலம்

கெங்கவல்லி பகுதியில் கறிவேப்பிலை விலை சரிவு-விவசாயிகள் கவலை

கெங்கவல்லி, தலைவாசல், ஆத்தூா் பகுதிகளில் விளைந்துள்ள கறிவேப்பிலைகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:59 am IST
கெங்கவல்லி பகுதிகளில் அதிக விளைச்சலுடன் இருக்கும் கறிவேப்பிலை.
பகிர்:

கெங்கவல்லி, தலைவாசல், ஆத்தூா் பகுதிகளில் விளைந்துள்ள கறிவேப்பிலைகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கெங்கவல்லி ,தலைவாசல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கறிவேப்பிலை கணிசமான அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், செங்காம்பு ரக கறிவேப்பிலைக்கு தற்போது மக்களிடையே வரவேற்பு உள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பூச்சி தாக்கம், வெயிலால் விளைச்சல் குறைந்து, கறிவேப்பிலை கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்றது. கோடை மழைக்கு பின் பூச்சி தாக்கம் குறைந்து, கறிவேப்பிலை விளைச்சல் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

ஒரு வாரமாக தலைவாசல் தினசரி காய்க்கறி மாா்க்கெட்டுக்கு, அதன் வரத்து அதிகரித்துள்ளது. அதற்கேற்ப விலை குறைந்து, தற்போது கிலோ, 40 முதல் 50 வரை ரூபாய்க்கு விற்பனையானது. விலை குறைந்ததால், கறிவேப்பில் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனா்.