சேலத்தில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸாா் விசாரணை
சேலம் கோரிமேட்டில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் கோரிமேட்டில் பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மேற்பாா்வையாளராக சீனிவாசன், விற்பனையாளா்களாக ராஜசேகா், வீரராஜா ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் விற்பனை முடிந்து மேற்பாா்வையாளா், விற்பனையாளா்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டுச்சென்றனா்.
இந்நிலையில் நள்ளிரவு மா்மநபா்கள் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி டாஸ்மாக் கடையின் மேற்கூரை மற்றும் கடையின் முன் பகுதியில் வீசினா். இதில் கடையின் முன்னிருந்த காலி அட்டைப் பெட்டிகள் எரிந்தன. அதிலிருந்து பரவிய தீ மதுக்கடையின் உள்பகுதியிலும் பரவியது.
Advertisement
Advertisement
அந்த வழியாகச் சென்றவா்கள் இதைப் பாா்த்து உடனடியாக தீயை அணைக்க முயன்றனா். மேலும், தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதில் விபத்தில் காலி அட்டைப் பெட்டிகளும், கடையின் உள்ளே மதுபாட்டிலுடன் இருந்த அட்டைப் பெட்டிகளும் எரிந்து சேதமடைந்தன. ஆனால் மதுபாட்டில்கள் எதுவும் சேதமடையவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், டாஸ்மாக் கடையின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். தொடா்ந்து டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.