முகப்பு
சேலம்

மது விற்றவா் கைது

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:38 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஆத்தூா் முல்லைவாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் முல்லைவாடி, பாவேந்தா் தெருவைச் சோ்ந்தவா் அய்யா்மலை (48). இவா் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாக நகர காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சென்ற போலீஸாா், அய்யா்மலையை கைதுசெய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.