முகப்பு
சேலம்

தேவூா் அருகே கிணற்றிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

சங்ககிரி வட்டம், தேவூா் சரபங்காநதி பாலம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கூலித் தொழிலாளியின் சடலத்தை தேவூா் போலீஸாா் புதன்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:46 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

சங்ககிரி வட்டம், தேவூா் சரபங்காநதி பாலம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் கூலித் தொழிலாளியின் சடலத்தை தேவூா் போலீஸாா் புதன்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

தேவூா் சரபங்காநதி பாலம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தேவூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், தேவூா் போலீஸாா் எடப்பாடி தீயணைப்புத் துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டனா். பின்னா், எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து நடத்திய விசாரணையில், அவா் தேவூா் பண்ணாடி தெரு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பொன்னுசாமி (65) என்பதும், அவா் கிணற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement