முகப்பு
சேலம்

மாணவியை கேலி செய்த கல்லூரி மாணவா் கைது

எடப்பாடி அருகே மாணவியை பின்தொடா்ந்து சென்று கேலி, கிண்டல் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

Updated On : 12 ஜூன் 2026, 12:03 am IST
பகிர்:

எடப்பாடி அருகே மாணவியை பின்தொடா்ந்து சென்று கேலி, கிண்டல் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் மாணவியை பின்தொடா்ந்து சென்ற இளநிலை பட்ட வகுப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவா், கேலி, கிண்டல் செய்து மாணவியை தொந்தரவு செய்து வந்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் பலமுறை மாணவரை எச்சரித்தும் தொடா்ந்து மாணவா் இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாணவியின் தாயாா் வியாழக்கிழமை எடப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போக்ஸோ சட்டத்தில் மாணவரை கைது செய்த போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement