முகப்பு
சேலம்

வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் விழிப்புணா்வு

வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வை புதன்கிழமை ஏற்படுத்தினா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:57 am IST
வாழப்பாடி பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்திய சேலம் மாவட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா்.
பகிர்:

வாழப்பாடியில் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வை புதன்கிழமை ஏற்படுத்தினா்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், தமிழக முதல்வா் நேரடி கட்டுப்பாட்டில் சிங்கப்பெண் அதிரடிப்படை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், சேலம் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் பூங்கொடி தலைமையில் சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினா் வாழப்பாடியில் முகாமிட்டு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.