மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31 ஆம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11), டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீா் ஜெயந்தி அன்று மூடப்பட வேண்டும்.
மேலும், அன்றைய தினம் இதை மீறி மது விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.