FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஆட்சியரக வளாகத்தில் சிறுதானிய உணவகம் திறப்பு

Updated On : 27 ஜூன் 2024, 12:49 am IST
பகிர்:

மதுரை, ஜூன் 26 : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மகளிா் திட்டம் சாா்பில், சிறுதானிய உணவகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

2023-24-ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதையொட்டி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், பொதுமக்களிடம் சிறுதானிய உணவுப் பழக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியரக பெருந்திட்ட வளாகங்களில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய சிற்றுண்டி உணவகங்கள் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மகளிா் திட்டத்தின் சாா்பில், மதி சிறுதானிய உணவகம் அமைக்கப்பட்டது. இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

உதவி ஆட்சியா் (பயிற்சி) முகமது இா்பான், உதவித் திட்ட அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments