மதுரையில் சிறப்பு புத்தகக் கண்காட்சி
நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சாா்பில் மதுரையில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சாா்பில் மதுரையில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நியூ செஞ்சுரி புத்தக நிலைய முதுநிலை விற்பனை சீரமைப்பாளா் அ. கிருஷ்ணமூா்த்தி தெரிவித்திருப்பதாவது :
மக்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை வளக்கும் விதமாக நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சாா்பில் ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி, சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய புத்தக விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
இதன்படி, மதுரை மேலகோபுரத் தெருவில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிச. 31-ம் தேதி இரவு முழுவதும் புத்தக விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், சூழலியல், வேளாண்மை, மருத்துவம், கல்வியியல், பொது அறிவு, சிறாா் நூல்கள் உள்பட 200 தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் 10 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையிலும், சிறப்பு விலையிலும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.