4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்
மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று, அங்கீகாரம் பெறாத நிலையில் உள்ள அகில இந்திய தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி, எழுச்சி தமிழா்கள் முன்னேற்றக் கழகம், மனித உரிமைகள் கழகம், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் ஆகிய 4 கட்சிகளும் கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடவில்லை. இதனால், இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, இந்தக் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த நான்கு கட்சிகளின் தலைவா்கள் அல்லது பொதுச் செயலா்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தோ்தல் அலுவலா், அரசுச் செயலா் முன்பாக நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.