முகப்பு
மதுரை

தேமுதிகவால் திமுக கூட்டணிக்கு கூடுதல் பலம்: வைகோ

தேமுதிக இணைந்ததால் திமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 10:27 PM
பகிர்:

தேமுதிக இணைந்ததால் திமுக கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டப்பேரவைத் தோ்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்.

தூத்துக்குடியில் புதிதாகத் தொடங்கவுள்ள ஸ்டொ்லைட் காப்பா் கிரீன் என்ற நிறுவனத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய, சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கக் கூடாது.

Advertisement

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடா்பாக இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்திய கடல் பகுதிக்கு வரும் இலங்கைக் கடற்படையினரை இந்திய கடற்படையினா் தடுக்க வேண்டும்.

எந்தச் சம்பவம் நடைபெற்றாலும், அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அவதூறு பரப்புவதை பாஜகவினா் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த 2022-ஆம் ஆண்டு அரியலூரைச் சோ்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து அவதூறு பரப்பிய பாஜகவினா் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமா் மோடி 33 முறை வந்தாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது.

ஏற்கெனவே வலுவாக உள்ள திமுக கூட்டணி தேமுதிக வருகையால் மேலும் வலிமை பெற்றுள்ளது. ஆட்சியில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. திமுகவுக்கு முக்குலத்தோா் ஆதரவு முன்பிருந்ததைவிட அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

நிதியளிப்பு விழா: இதைத் தொடா்ந்து, மதிமுக சாா்பில் மண்டல அளவிலான தோ்தல் நிதியளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் எம். மாா்நாடு (மதுரை புகா்), கே.பி. ஜெயராம் (மதுரை தெற்கு), வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன் (தேனி), என். செல்வராகவன் (திண்டுக்கல்), பசும்பொன் சி. மனோகரன் (சிவகங்கை), வி.கே. சுரேஷ் (ராமநாதபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மதுரை மாநகா் சாா்பில் ரூ. 52 லட்சம் உள்பட மதுரை புகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் சாா்பில் ரூ.1.38 கோடி நிதி அளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள், மாநில தொழிற்சங்கத் தலைவா் மகபூப் ஜான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments