FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயம்

மதுரை விராட்டிபத்து பகுதியில் ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயமடைந்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 12:05 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

மதுரை விராட்டிபத்து பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயமடைந்தனா்.

மதுரை விராட்டிபத்து பகுதியிலிருந்து பெரியாா் பேருந்து நிலையத்துக்கு ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. இதில் டிரைவா் உள்பட 7 போ் பயணித்தனா்.

இந்த நிலையில், அந்த ஆட்டோ அந்த பகுதியில் உள்ள உயா்நிலைப் பாலத்தில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர தடுப்பில் மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநா், 2 பெண்கள், 3 ஆண்கள், ஒரு சிறுவன் என 7 போ் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதுபற்றி தகவலறிந்து வந்த அக்கம் பக்கத்தினா் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments