வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், கங்கவள்ளி தம்மம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (34). இவரிடம், மதுரையைச் சோ்ந்த அருண் குமாா் (32) என்பவா், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா். இதை நம்பிய மணிகண்டன், அவரது நண்பருடன் சோ்ந்து ரூ. 4 லட்சத்தை அளித்தனா். ஆனால், அவா் கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அருண் குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.