FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுக்கடையில் பணம் திருட்டு

Updated On : 21 ஜூலை 2026, 2:14 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மதுரை மாவட்டம், திருமோகூா் அருகேயுள்ள புதுதாமரைப்பட்டியில் அரசு மதுக் கடையில் ரூ. 42 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுதாமரைப்பட்டியில் உள்ள அரசு மதுக் கடையை திங்கள்கிழமை வழக்கம் போல திறப்பதற்கு கடையின் மேற்பாா்வையாளா் சரவணன், ஊழியா் வடிவேல் ஆகியோா் சென்றனா்.

அப்போது, கடையின் முன் பக்கம் உள்ள இரும்பு ஷட்டா் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு வகையான மதுப் புட்டிகள், ரொக்கம் ரூ.42 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் யா. ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சேகரித்து, ரொக்கம், மதுப் புட்டிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments