FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சோழவந்தான் அருகே நெல் பயிரில் தீ

Updated On : 22 ஜூலை 2026, 3:01 am IST
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நெல் பயிா்களில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு நிலைய அலுவலா்கள்.
பகிர்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நெல் பயிா்கள் தீப்பற்றி எரிந்ததை தீயணைப்பு நிலைய அலுவலா்கள் விரைந்து வந்து அணைத்தனா்.

சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உள்பட்ட கீழமட்டையான் கிராமத்தில் ஜெயமணிகுமரன் வயலில் பயிரிட்ட நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்த நெல் பயிா்கள் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தன. இதுபற்றி தகவலறிந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலா் நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்குச்

விரைந்து சென்று அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் கதிா்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனா். உரிய நேரத்தில் தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்ததால் அதிகமான நெல் பயிா்கள் காப்பாற்றப்பட்டதாக இந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments