முகப்பு
மதுரை

பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்

Updated On : 28 ஜூன் 2026, 1:32 am IST
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி-பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலையில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்தப் பகுதி மக்கள்.
பகிர்:

மதுரை மாவட்டம், கருப்பட்டி கிராமத்தில் அரசுப் பேருந்தை முறையாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சோழவந்தான் அருகேயுள்ள கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சோழவந்தானிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் சரியான நேரத்துக்கு வருவதில்லை எனவும், பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி மக்கள் கருப்பட்டி- பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலையில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த சோழவந்தான் போலீஸாா், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments