FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் ரோஜா தோட்டத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:21 am IST
பகிர்:

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் ரோஜா தோட்டத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தமிழக அரசு தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரோஜாத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ரோஜா மலர் நாற்றுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பல வண்ண ரோஜா மலர்கள் பூத்து வருகிறது.
 இவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சலுகை கட்டணம்(பெரியவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ 20-ம், சிறுவர்கள் நபர் ஒன்றுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படும்) செலுத்த வேண்டும் என தோட்டக்கலைத் துறை அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments