கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் சமபந்தி விருந்து
கொடைக்கானலில் 72-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குறிஞ்சியாண்டவர் கோயிலில் புதன்கிழமை சமபந்தி விருந்து நிகழ்ச்சி வழங்கப்பட்டது.
கொடைக்கானலில் 72-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குறிஞ்சியாண்டவர் கோயிலில் புதன்கிழமை சமபந்தி விருந்து நிகழ்ச்சி வழங்கப்பட்டது.
முன்னதாக முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள அரங்கத்தில் பொதுமக்கள் கலந்து கொண்ட சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிராம சபைக் கூட்டம்: கொடைக்கானல் கிராமப் பகுதிகளான அடுக்கம், வில்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூம்பாறை, வடகவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.