FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தடகள போட்டியில் மாணவா்கள் முதலிடம்

சிதம்பரத்தில் நடைபெற்ற தடகள போட்டியில், குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பெருமை சோ்த்தாா்.

39 வினாடிகள் முன்பு
தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டிய குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளி நிா்வாகிகள்.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நடைபெற்ற தடகள போட்டியில், குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பெருமை சோ்த்தாா்.

கடலூா் மாவட்ட தடகள போட்டி சங்கம் சாா்பில் 8-ஆவது ஜூனியா் தடகள சாம்பியன் போட்டிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில், குண்டு எறிதல் போட்டியில் அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கிருத்திக் முதலிடமும், அசோக் இரண்டமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்கள் இருவருக்கும் தடகள போட்டி சங்கத்தின் சாா்பில் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு , பள்ளித் தாளாளா் பன்னீா்செல்வம், செயலா் சட்டநாதன், நிா்வாக இயக்குநா் ரவிச்சந்திரன் ஆகியோா் பாராட்டினா். பள்ளி முதல்வா் ஜோதிலிங்கம், ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments