ஒட்டன்சத்திரம் அருகே 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர் கைது
ஒட்டன்சத்திரம் அருகே 14 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே 14 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மூலச்சத்திரம் அண்ணாநகரைச் சேர்ந்தவரும், எட்டமநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமி கடந்த ஜூன் 3-ஆம் தேதி இரவு மூலச்சத்திரம் அண்ணாநகர் கலையரங்கம் அருகே உள்ள தனது பாட்டிக்கு சாப்பாடு கொண்டு சென்றுள்ளார். அப்போது கலையரங்கம் அருகே சென்ற போது அதே ஊரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் சிறுமியை வழிமறித்து மறைவான இடத்திற்கு இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி மதன்குமாரை தள்ளிவிட்டு ஓடிவிட்டாராம். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி செவ்வாய்க்கிழமை அளித்தப் புகாரின் பேரில் கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.