ஒட்டன்சத்திரம் அருகே லாரி- பைக் மோதல்: விவசாயி சாவு
ஒட்டன்சத்திரம் அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னமண்டவாடியைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் (42). இவர் புதன்கிழமை டி.கே.புதூரில் உள்ள மனைவி சுமதியை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்றார். ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் வீரமுத்து சாலை அருகே சென்ற போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தங்கராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து அம்பிளிக்கை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் உத்தமபாளையம் கோகிலாபுரத்தைச் சேர்ந்த வீரபாண்டியை (24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.