FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!

நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல்...

நேபாள வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு... - ஏபி
பகிர்:

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தின் கோஷி ஆற்றில் இன்று (ஆக. 26) திடீரென ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் அதிகமான இந்தியர்கள் உள்பட ஏராளமானோரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த வெள்ளத்தால், ரஸ்காவதி எனும் பகுதியே அடையாளம் தெரியாமல் சிதைந்துள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் அங்குள்ள பல்வேறு முக்கிய கட்டமைப்புகள் அடித்துச் செல்லும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளதாகவும், காவல்துறையைச் சேர்ந்த 22 பேரைக் காணவில்லை எனவும் நேபாள காவல் துறையின் செய்தித்தொடர்பாளர் அபி நாராயண் காஃப்லே தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வெள்ளத்தில் பலியானவர்களில் இதுவரை 72 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றிருந்த 36 பெண்கள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேர் வெள்ளத்தால் அங்கு சிக்கித் தவிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

It has been reported that the death toll from the massive floods in Nepal has risen to 95.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments