FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கோபிநாத சுவாமி கோயில் உறியடித் திருவிழா

Updated On : 30 ஆகஸ்ட் 2024, 4:16 am IST
ரெட்டியாா்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில் வளாகத்தில் வழுக்கு மரம் ஏறிய இளைஞா்கள்.
பகிர்:

ரெட்டியாா்சத்திரம் அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த திங்கள்கிழமை முதல் இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. ரெட்டியாா்சத்திரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 22 கிராமங்களில் உற்சவா் மலையப்ப சுவாமி 3 நாள்கள் வலம் வந்தாா். பின்னா், அருள்மிகு கதிா் நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா்.

வழுக்கு மரம்: இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 40 அடி உயர வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி வழுக்கு மரத்தில் ஏறிய வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மீது, கூடி நின்ற பக்தா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். சுமாா் 2 மணி நேர முயற்சிக்குப் பிறகு வழுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பரிசு முடிப்பை இளைஞா்கள் கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

பின்னா், உறியடித் திருவிழா நடைபெற்றது. உறி மரத்தில் 3 அடுக்குகளில் கட்டப்பட்டிருந்த தயிா், பால், பன்னீா் உள்ளிட்ட கலயங்கள், ஒவ்வொன்றாக அடித்து உடைக்கப்பட்டன. இறுதியாக உடைக்கப்பட்ட கலயத்திலிருந்த வெண்ணை பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments