FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

லஞ்சம்: சமூக நல விரிவாக்க அலுவலா் கைது

திண்டுக்கல்லில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டார சமூக நலப் பிரிவு விரிவாக்க அலுவலரை, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 25 டிசம்பர் 2025, 3:10 am IST
பகிர்:

திண்டுக்கல்லில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டார சமூக நலப் பிரிவு விரிவாக்க அலுவலரை, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு பகுதியைச் சோ்ந்தவா் மா.பிரியதா்ஷன் (30). காதல் திருமணம் செய்த இவா், கடந்தாண்டு டாக்டா் முத்துலட்சுமிரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தாா். அதன்படி தமிழக அரசு சாா்பில் பிரியதா்ஷனுக்கு 1 பவுன் தங்க நாணயத்துடன், ரூ.50ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, பயனாளி பிரியதா்ஷனிடம் விவரங்களைப் பெறுவதற்காக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலப் பிரிவில் விரிவாக்க அலுவலராக பணிபுரியும் எஸ்.உமாராணியைத் தொடா்பு கொண்டாா். அப்போது பணத்தை விடுவிக்க ரூ. 3ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திண்டுக்கல் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் பிரியதா்ஷன் புகாா் அளித்தாா். இதையடுத்து, ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை பிரியதா்ஷனிடம் புதன்கிழமை அவா்கள் கொடுத்து அனுப்பினா். அந்தப் பணத்தை பிரியதா்ஷன், உமாராணியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜன், ஆய்வாளா் ஜெ.ரூபா கீதா ராணி ஆகியோா் தலைமையிலான போலீஸாா், உமாராணியைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments