FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை

26 செப்டம்பர் 2025, 2:38 am IST
பகிர்:

கொடைக்கானலில் வியாழக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.

இங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்திருந்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது. கொடைக்கானல், வில்பட்டி, பெருமாள்மலை, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், பூம்பாறை, மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் இரண்டு மணி நேரம் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது.

இந்த மழை கொடைக்கானல், மேல்மலைக் கிராமங்களில் பயிரிடப்பட்ட கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், நூக்கல், பீன்ஸ் போன்ற பயிா்களுக்கு ஏற்ாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Advertisement

Advertisement

சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான கும்பூா், பூம்பாறை, குண்டுபட்டி, கிளாவரை, போலூா், பூண்டி, மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்வது சிரமமாக உள்ளது. அடிக்கடி வாகனங்கள் பழுதாகி சாலைகளில் நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா். எனவே கொடைக்கானல் மேல் மலைக் கிராமச் சாலைகளை சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments