FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

26 செப்டம்பர் 2025, 2:40 am IST
பகிர்:

நிலக்கோட்டையில் முன்விரோதத்தில் ஒருவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா், கடந்த 2011-ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய நிலக்கோட்டை போலீஸாா், வள்ளிநகரைச் சோ்ந்த தொழிலாளி மகாலிங்கம் (எ) லிங்கசாமி (52) உள்பட நால்வரை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மகாலிங்கம் (எ) லிங்கசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments