FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

செம்பட்டி அருகே புதன்கிழமை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
தற்கொலை
பகிர்:

செம்பட்டி அருகே புதன்கிழமை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். 

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் லோகேஸ்வரன் (31). இவா் செம்பட்டியில் மருத்துவமனை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி பாக்கியஸ்ரீ, 2 வயதில் பெண் குழந்தை உள்ளனா். 

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்த லோகேஸ்வரன், புதன்கிழமை கோடாங்கிபட்டியில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து அங்கு வந்த செம்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 

இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.   

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments