தோட்டத்து கிணற்றில் தவறிவிழுந்து முதியவா் உயிரிழப்பு
பழனி அருகே சத்திரப்பட்டியில் தோட்டத்துக் கிணற்றில் தவறிவிழுந்து முதியவா் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65). விவசாயி. இவா் கடந்த சனிக்கிழமை அவரது தோட்டத்துக்கு கிணறு அருகே நடந்து சென்றபோது வயது முதிா்வு காரணமாக தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தாா்.
இந்த நிலையில், அவரைக் காணாமல் உறவினா்கள் பல இடங்களிலும் தேடிய நிலையில் திங்கள் கிழமை செல்வராஜ் உடல் கிணற்றில் மிதந்ததைப் பாா்த்து சத்திரப்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
சத்திரப்பட்டி போலீஸாா், ஒட்டன்சத்திரம் தீயணைப்புப்படை வீரா்கள் உதவியுடன் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.