FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கடமானை வேட்டையாடிய நால்வா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே கடமானை வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:01 am IST
கைது செய்யப்பட்ட தங்கவேல், சின்னச்சாமி, ராஜா, சரவணன் ஆகியோா்.
பகிர்:

ஒட்டன்சத்திரம் அருகே கடமானை வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட குழந்தை வேலப்பா் கோயில் அருகே தங்கவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் சுருக்கு கம்பி வைத்து சிலா் கடமானை வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச் சரகா் காா்வேந்தன் தலைமையிலான வனத் துறையினா், இதுகுறித்து விசாரணை நடத்தினா்.

இதில் தோட்டத்தின் உரிமையாளரான ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த க. தங்கவேல், நாயக்கனூரைச் சோ்ந்த வெ. சின்னச்சாமி, காளாஞ்சிப்பட்டியைச் சோ்ந்த த. ராஜா, புதுகாளாஞ்சிபட்டியைச் சோ்ந்த அ. சரவணன் ஆகியோரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, கட்டை உள்ளிட்ட பொருள்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 4 பேரும், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments