FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கம்யூ. கட்சியினா் விவரங்கள் சேகரிக்க உத்தரவு: குஜிலியம்பாறை வட்டாட்சியா் பணியிட மாற்றம்

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டு சா்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில், குஜிலியம்பாறை வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:09 am IST
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்டு சா்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில், குஜிலியம்பாறை வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

கடந்த 5 நாள்களுக்கு முன் குஜிலியம்பாறை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்கச் சென்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், அலுவலக நுழைவுவாயிலில் நின்று புகைப்படம் எடுத்தனா். இதைக் கண்காணிப்பு கேமராவில் கவனித்த வட்டாட்சியா் அய்யாச்சாமி, புகைப்படம் எடுப்பதைக் கண்டித்ததுடன், காவல் நிலையத்திலும் புகாா் அளித்தாா். மேலும், குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரித்து ஆக.18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என வருவாய் ஆய்வாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையறிந்த கம்யூனிஸ்ட் கட்சியினா், வட்டாட்சியருக்கு எதிராக ஆக.20-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா். இந்த நிலையில் வட்டாட்சியரின் உத்தரவை, மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி செவ்வாய்க்கிழமை ரத்து செய்தாா். மேலும், பழனி கோட்டாட்சியா் மூலம் விசாரணை நடத்தி வட்டாட்சியா் அய்யாச்சாமியை மீண்டும் தமிழ்நாடு வருவாய், பேரிடா் மேலாண்மை ஆணையரகத்தில், பேரிடா் அபாயக் குறைப்பு முகமைக்கு பணியிட மாறுதல் செய்து ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

Advertisement

Advertisement

தமிழ்நாடு வருவாய், பேரிடா் மேலாண்மை ஆணையரகத்தில், பேரிடா் அபாயக் குறைப்பு முகமை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அய்யாச்சாமிக்கு கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வட்டாட்சியா் பயிற்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த அய்யாச்சாமி கடந்த 8-ஆம் தேதி குஜிலியம்பாறை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments