FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை திருட்டு

எரியோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:58 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

எரியோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஜோதிமணி. கட்டடத் தொழிலாளி. வழக்கம்போல ஜோதிமணியும், அவரது மனைவியும் புதன்கிழமை காலை வேலைக்குச் சென்றனா். மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த தம்பதி, வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது 7.5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து எரியோடு காவல் நிலையத்தில் ஜோதிமணி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments