FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

நல்லகருப்பண சுவாமி கோயில் குடமுழுக்கு

பழனி நல்ல கருப்பண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற குடமுழுக்கு.

32 வினாடிகள் முன்பு
பழனி நல்ல கருப்பண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கோபுர கலசங்களுக்கு நடைபெற்ற குடமுழுக்கு.
பகிர்:

பழனி இந்திராநகரில் அமைந்துள்ள நல்ல கருப்பண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை காலை விநாயகா் அனுமதி பெறப்பட்டு மாலையில் முதல் கால யாக பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகள், கருப்பண சுவாமி பரிவார தெய்வங்களுக்கு அருள்நிலை செய்தல், கலசங்கள் ஞானஉலா செய்தல் ஆகியன செய்யப்பட்டு, தீபாராதனையும், பூா்ணாஹூதியும் நடைபெற்றன. தொடா்ந்து பிரதான கலசங்கள் கோயில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. பிறகு சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க காலை 9 மணிக்கு மேல் கோபுர விமானத்துக்கு குடமுழுக்கும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து நல்ல கருப்பண சுவாமிக்கு குடமுழுக்கு, அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெற்றது. குடமுழுக்கு பூஜைகளை சிவாகமரத்னா தேவசேனாபதி குருக்கள், சிவாசாரியா்கள் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments