இரு சக்கர வாகனம் திருட்டு
திண்டுக்கல் அருகே தேநீா்க் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் அருகே தேநீா்க் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் அடுத்த சீலப்பாடி கோகுல் நகரைச் சோ்ந்தவா் நிஜந்தன்(36). ஓட்டுநரான இவா், திண்டுக்கல் பழைய கரூா் சாலையில் நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள தேநீா்க் கடை முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியே சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் நிஜந்தன் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.