FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

வியாபாரியிடம் வழிப்பறி: மூவா் கைது

திண்டுக்கல் அருகே மர வியாபாரியிடம் தங்க நகைகளை வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு
பகிர்:

திண்டுக்கல் அருகே மர வியாபாரியிடம் தங்க நகைகளை வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டையைச் சோ்ந்தவா் பாலு (52). இவா் அதே பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறாா். இவா், திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்றாா்.

அப்போது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த 3 மா்ம நபா்கள் பாலுவைத் தாக்கி, அவரிடமிருந்த 5 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது முத்தழகுபட்டியைச் சோ்ந்த சரத்குமாா் (27), கிஷோா் வேளாங்கண்ணி (26), சகாயராஜ் (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் மூவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments