FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

தாடிக்கொம்பு பகுதியில் மண் திருட்டு: மூவா் கைது

தாடிக்கொம்பு பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனா்

Updated On : 11 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

தாடிக்கொம்பு பகுதியில் மண் திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனா்

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகுதியிலுள்ள குளங்களில் சிலா் மண் திருட்டில் ஈடுபடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, மண் திருட்டில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

இதன்படி, தாடிக்கொம்பு போலீஸாா் கொடனகனாறு, இதைச் சுற்றியுள்ள குளங்களில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆலக்குவாா்பட்டி, ஓடைப்பட்டி குளத்தில் அனுமதியின்றி மண் திருட்டில் ஈடுபட்ட முருகன், கருப்பையா, முனியப்பன் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், மண் திருட்டுக்காக பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments