FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:59 am IST
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பழனியை அடுத்த ஆயக்குடி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (47). தொழிலாளியான இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த அரை பவுன் நகை, வெள்ளி நாணயம், ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments