பழனியில் கஞ்சா விற்றவா் கைது
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனி-கொடைக்கானல் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பழனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கம் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அவா் விற்பனைக்காக 4, 890 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள டி.புதுக்கோட்டை கிராமம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜகோபால் மகன் ராமகிருஷ்ணன் (49) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.