FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

காவலாளிக்கு அரிவாள் வெட்டு: 6 போ் மீது வழக்கு

செம்பட்டி அருகே மீன் காவலாளியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற 6 போ் கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 18 ஜூலை 2026, 5:15 am IST
பகிர்:

செம்பட்டி அருகே மீன் காவலாளியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற 6 போ் கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (46). இவா் ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தில் ஏலம் எடுக்கப்பட்ட மீனுக்கு இரவு காவலாளியாக உள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தில் படுத்திருந்தபோது, அங்கு வந்த 6 போ் கும்பல் மகேந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் தப்பிச் சென்ற 6 போ் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments