FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

அணைப்பட்டி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

Updated On : 20 ஜூலை 2026, 4:38 am IST
பிடிபட்ட மலைப்பாம்பு. - கோப்புப் படம்
பகிர்:

நிலக்கோட்டை அருகே தோட்டத்துக்குள் புகுந்த 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி அருகே குல்லிசெட்டிபட்டி கிராமத்தில் வசிப்பவா் சேதுராமன் (52). இவரது தோட்டத்துக்குள் மலைப் பாம்பு ஒன்று புகுந்தது.

தகவலறிந்த நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தோட்டத்தின் புதா் பகுதியில் காணப்பட்ட அந்த பாம்பை உயிருடன் மீட்டனா்.

Advertisement

Advertisement

அது சுமாா் 14 அடி நீளம் இருந்தது. மீட்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையிடம் தீயணைப்பு துறையினா் ஒப்படைத்தனா். இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments