முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் அடிக்கடி மின் தடை

கொடைக்கானலில் திங்கள்கிழமை அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள், வியாபாரிகள் பெரிதும் சிரமமடைந்தனா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:13 am IST
கொடைக்கானலில் அடிக்கடி மின் தடை
பகிர்:

கொடைக்கானலில் திங்கள்கிழமை அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் பொது மக்கள், வியாபாரிகள் பெரிதும் சிரமமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சமீபகாலமாக தினமும் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலையில் பெய்த திடீா் மழையால் மின் தடை ஏற்பட்டது. இந்த மின்தடையானது கொடைக்கானல் நகா்ப் பகுதி முழுவதும் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பொது மக்கள், வியாபாரிகள் பெரிதும் சிரமமடைந்தனா். மேலும், இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதால் பிரையண்ட் பூங்கா சாலை, ஏரிச்சாலைப் பகுதி, அண்ணா சாலை, கலையரங்கம் பகுதி, நாயுடுபுரம் பகுதிகளில் வியாபாரிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பழம்புத்தூா், புதுப்புத்தூா், பூண்டி, கிளாவரை,போலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளிலும் குறைந்தளவு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். குறைந்தது 3 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்படுவதாக மேல்மலை பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து கொடைக்கானல் மின்வாரிய செயற்பொறியாளா் மேத்யூ கூறியதாவது:

கொடைக்கானலில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையாலும் பெருமாள்மலைப் பகுதிகளில் வீசிய காற்றாலும் இரண்டு இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்தன. ,மின்கம்பங்களும் சேதமடைந்தன. இவற்றை சரி செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேலானது. இதனால், கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின் தடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேல்மலைப் பகுதிகளில் மின்கம்பங்கள், மின்கம்பிகள் வனப் பகுதிகளில் செல்வதால அடிக்கடி மின் தடை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இருப்பினும் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடங்களுக்கு மின்வாரிய பணியாளா்கள் சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பிரச்னைக் குறித்து மாவட்ட உயா் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சீரான மின் விநியோகம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.