கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு செல்லும் பென்டா்லாக் சாலையில் சாலையோரத்திலிருந்து கழிவு நீா் வெளியேறி சாலை வழியாகச் சென்று நட்சத்திர ஏரியில் கலக்கிறது. இதனால், ஏரி மாசடைந்து கூவம் போல காட்சியளிக்கிறது.
இந்த நிலை தொடா்ந்தால் நட்சத்திர ஏரியில் மிகவும் துா்நாற்றம் வீசும் சூழல் ஏற்படும். எனவே, நகராட்சி நிா்வாகம் ஏரியில் கழிவு நீா் கலப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கலந்து வரும் கழிவு நீா் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.