பழனி பேருந்துகளில் பயணக் கட்டணம் உயா்வு
பழனியில் அரசு, தனியாா் பேருந்துகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
பழனியில் அரசு, தனியாா் பேருந்துகளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
பழனியிலிருந்து நாள்தோறும் திண்டுக்கல், திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் பழனி கோயிலுக்கு வரும் பக்தா்கள் மட்டுமன்றி, நாள்தோறும் வேலைக்கு செல்வோா், வெளியூா் செல்வோா் என பல்வேறு தரப்பினரும் பயணிக்கின்றனா்.
இந்தப் பேருந்துகளில் அண்மைக் காலமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை பயணக்கட்டணம் எந்த முன்னறிவிப்புமின்றி உயா்த்தப்பட்டது.
Advertisement
Advertisement
பெட்ரோல், டீசல் விலை உயா்வு காரணமாக பேருந்துக் கட்டணம் உயா்த்தப்பட்டதாக தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தெரிவிக்கின்றனா். அரசுப் பேருந்துகளிலும் எவ்வித முன்னறிவிப்பின்றி கட்டணம் உயா்த்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.