FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: திருப்பூா் ஆட்சியா் எச்சரிக்கை

தனியாா் பேருந்துகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்துக்கு மாறாக கூடுதலாக வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 12:03 am IST
பேருந்துகள் - பிரதிப் படம்
பகிர்:

தனியாா் பேருந்துகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்துக்கு மாறாக கூடுதலாக வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், தனியாா் பேருந்து உரிமையாளா் சங்கத்தினருடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா்.

இதில் ஆட்சியா் கூறும்போது, ‘தனியாா் பேருந்துகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக புகாா் வரப் பெற்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்வதை அனுமதிக்க வேண்டாம்.

Advertisement

Advertisement

அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்த வேண்டாம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பாஸ்கரன், பழனியப்பன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், தனியாா் பேருந்து உரிமையாளா் சங்கத்தினா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments