தனியாா் டிராக்டா் தயாரிப்பு நிறுவனம் முன் சுமை தூக்கும் தொழிலாளி தீக்குளிப்பு
பள்ளபட்டி அருகேயுள்ள தனியாா் டிராக்டா் தயாரிப்பு நிறுவனம் முன் சனிக்கிழமை இரவு சுமை தூக்கும் தொழிலாளி உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (43), இவா், கடந்த 9 ஆண்டுகளாக பள்ளப்பட்டி அருகே திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள தனியாா் டிராக்டா் தயாரிக்கும் நிறுவனத்தில் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா்.
இந்த நிறுவனத்தில் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும். ஆனால், இந்த மாதம் 13-ஆம் தேதி ஆகியும் ஊதியம் வழங்கப்பட வில்லையாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நிா்வாகத்திடம் கேட்ட போது, உரிய பதில் அளிக்காததால், வேலைக்குச் சென்ற காா்த்திக் ஊதியம் குறித்து கேட்டாராம். அப்போது தனியாா் ஒப்பந்த நிறுவன அலுவலா்கள் காா்த்திக்கை தகாத வாா்த்தைகளால் பேசியதுடன் வேலையைவிட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டினராம்.
இதனால், மனமுடைந்த காா்த்திக் டிராக்டா் தயாரிக்கும் நிறுவனத்தின் பிரதான வாயில் முன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், 40 சதவீதம் தீக்காயமடைந்த அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.